மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு: நடுவழியில் ஆங்காங்கே நின்றதால் பயணிகள் அவதி!

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு: நடுவழியில் ஆங்காங்கே நின்றதால் பயணிகள் அவதி!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்துக்கான சாதனங்களில் மிகப்பெரிய பங்கு வகிப்பது மெட்ரோ ரயில் சேவை. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அதில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சின்னமலை ரயில் நிலையத்தில் இருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை ஒற்றைப் பாதையில் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் விம்கோ நகர் பணிமணையில் இருந்து நீல நிற வழித்தடத்தில் உள்ள சின்னமலை ரயில் நிலையம் வரை வழக்கமான சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க : திருப்பதியில் மக்கள் அச்சம்...யானை தாக்கியதில் தம்பதிக்கு நிகழ்ந்த விபரீதம்!

அதேசமயம் வழக்கமான ரயில் சேவைகள் பச்சை நிற வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே ஷார்ட் லூப் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், மெட்ரோ பயணிகள் வேலைக்கு செல்வதற்கு முடியாமல் மிகவும் அவதியடைந்தனர்.