"காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டி புதிதல்ல" கே.எஸ். அழகிரி!

"காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டி புதிதல்ல" கே.எஸ். அழகிரி!

காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டி புதிதல்ல என குறிப்பிட்ட கே. எஸ். அழகிரி, கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான் எனவும் விளக்கமளித்துள்ளார்.

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி டெல்லி புறப்பட்டனர். அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரசார் வழியனுப்பி  வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே எஸ் அழகிரி, நேற்று நடைபெற்ற மகளிர் உரிமை மாநாடு ஏறக்குறைய இந்தியா கூட்டணி மகளிர் மாநாடு தான் என பெருமைபட கூறினார்.

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் சென்னையிலும்  நடைபெறும் என்பதை உறுதிபடுத்தி கூறிய கே. எஸ்அழகிரி,  மகளிர் உரிமை மாநாடு மூலம் பெண்களை ஒன்று திரட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டி புதிதல்ல என்பதை சுட்டிக்காட்டி பேசிய கே. எஸ். அழகிரி, கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான் எனவும் விளக்கமளித்தார்.

இதையும் படிக்க: பகையால் நேர்ந்த விபரீதம்...குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!