பரமக்குடி : அரசு பள்ளி மாணவர்களின் போதை விழிப்புணர்வு பேரணி...!

பரமக்குடியில் அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பரமக்குடி : அரசு பள்ளி மாணவர்களின் போதை விழிப்புணர்வு பேரணி...!

தமிழகத்தில் போதைப் பழக்கம் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. போதை பொருட்களை தடைசெய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புணர்வு நடத்தி வருகிறது. 

இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கீழ முஸ்லீம் மேனிலை பள்ளியில் தொடங்கி, ஐந்து முனை, உழவர் சந்தை உட்பட நகர் முழுவதும் மாணவ - மாணவிகள் பேரணி சென்றனர். 100க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கையில்  பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.