பழனிச்சாமி பீஷ்மராக இருந்து அதிமுகவை காப்பார்....!!

பழனிச்சாமி பீஷ்மராக இருந்து அதிமுகவை காப்பார்....!!

மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் எனவும் மக்களுக்கு எதிராக ஆளுங்கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் அதிமுக செயலாளர் ஆதிராஜா ராம் கூறியுள்ளார்.

இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது.  தோல்வி குறித்து அதிமுக செயலாளர் பேசிய போது திமுகவிற்கு தைரியம் இருந்திருந்தால் திமுக வேட்பாளரை நேரடியாக நிறுத்தி இருக்க வேண்டும் எனவும்  ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனவும் பேசியுள்ளார்.

மேலும் மகாபாரதத்தில் பீஷ்மரை வீழ்த்த எடுத்த சதி திட்டங்களை போலவே இன்று திமுகவின் நடவடிக்கைகள் உள்ளது எனவும் ஆனால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பீஷ்மராக இருந்து அதிமுகவை காப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஆர் கே நகர் தேர்தலின்போது திமுக டெபாசிட் இழந்தது எனவும் ஆனால் இன்று ஆட்சியில் உள்ளது எனவும் இடைத்தேர்தலின் வெற்றி எதையும் பிரதிபலிக்காது எனவும் அதிமுக அமைப்பு செயலாளர் ஆதிராஜா ராம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுக்க வேண்டும்...!!!