செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைக்க சென்னை வருகிறார் பிரதமர் மோடி !

செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைக்க சென்னை வருகிறார் பிரதமர் மோடி !

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக வரும் 28-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருகிறார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி:

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனிடையே போட்டிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வருகை தருகிறார் பிரதமர் மோடி:

இந்நிலையில் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி சென்னை வருகிறார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.