மாநிலங்களவை வேட்பாளராக பா.சிதம்பரம் தேர்வு.. நாளை வேட்பு மனு தாக்கல்

காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை வேட்பாளராக பா.சிதம்பரம் தேர்வு.. நாளை வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

திமுக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு  ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. இதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் ப.சிதம்பரம் இடையே போட்டி நிலவியது.

இந்தநிலையில் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் எம். எல்.ஏக்கள் கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ப. சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் விஜயதாரணி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில் நாளை பா.சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.