ஒரு லட்சத்தை தாண்டிய வேட்பு மனுக்கள்...  வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் செய்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை, கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை நெருங்கியது.

ஒரு லட்சத்தை தாண்டிய வேட்பு மனுக்கள்...  வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை...

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு, வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 

புதிதாக உருவான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. 9 மாவட்டங்களில் மொத்தமாக 97 ஆயிரத்து 831 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72 ஆயிரத்து 71 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15 ஆயிரத்து 967 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதேபோல ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 ஆயிரத்து 671 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 122 பேரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வரும் நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற  25ஆம் தேதி  கடைசி நாள் ஆகும்.