தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த உத்தரவு

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் உள்ள முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த உத்தரவு

கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10-ம் வகுப்புக்கு 39 சதவீத பாடங்களும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடங்களும், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பாடங்களுக்கு 50 சதவீத பாடங்களும் குறைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் 1 முதல் 10-ஆம் வகுப்புக்கு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 12-ம் வகுப்புக்கு வரும் 20-ம் தேதியும். 11-ம் வகுப்புக்கு வரும் 27-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழு பாடங்களாக நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.