மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு.. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு.. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கொடுக்கா விட்டால் சுமார் 20 நாட்கள் வரை நெல் கொள்முதல் செய்ய மறுத்து அதிகாரிகள், விவசாயிகளை அலைகழிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மணப்பாறை அடுத்த கரும்புலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற விவசாயி, ஸ்டேட் வங்கியில் 14 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதில் 7 லட்சம் ருபாயை திருப்பி செலுத்திய நிலையில், மோசடியாக கணக்குகளை சேர்த்து 58 லட்சத்திற்கு கணக்கு காட்டி அவரது 3 கோடி மதிப்புள்ள வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வங்கி ஜப்தி செய்துள்ளதாகவும் அய்யாகண்ணு அப்போது குற்றம்சாட்டினார்.