வேறு கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை... ஓட்டு மட்டும் பா.ம.க.வுக்கு போடுங்கள் - ராமதாஸ்

உயர் பதவியில் வன்னியர்கள் ஒருவர் கூட இல்லை என ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

வேறு கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை... ஓட்டு மட்டும் பா.ம.க.வுக்கு போடுங்கள் - ராமதாஸ்

செங்கல்பட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்ட ம் நடைபெற்றது. மறை மலை நகரில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ரா மதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் எந்த கட்சி வன்னியர்களுக்காக போராடியது,  நான் தான் தான் தொடர்ந்து போராடி வருகிறேன்.

வன்னியர்களுக்கு இன்னொரு ரா மதாஸ் பிறக்க போவதில்லை. இனி முடிவு செய்ய வேண்டியது வன்னியர்கள் தான். வன்னியர்கள் வேறு கட்சியில் இருந்தாலு ம் சரி, பா மக விற்கு வர வேண்டா ம். வாக்கு மட்டு ம் பா. ம.க.விற்கு அளித்து வெற்றி பெற செய்யு மாறு கேட்டுக் கொண்டார்.

நாள்தோறு ம் அறிக்கை வெளியிடுகிறேன், அதில் வன்னியர்களுக்காக மட்டு மா அறிக்கை வெளியிடுகிறேன், ஒட்டு மொத்த  த மிழக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன். எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு ம் இல்லாத அக்கறை தனக்குதான் உள்ளது என கூறினார்.