அதிமுக பொதுக்குழு தீா்ப்பு இறைவனுக்கே தொியும்...ஓபிஎஸ் சொன்ன பதில்!

அதிமுக பொதுக்குழு தீா்ப்பு இறைவனுக்கே தொியும்...ஓபிஎஸ் சொன்ன பதில்!

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு "இறைவனுக்கே தெரியும்" என்று முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் தொிவித்துள்ளாா்.

கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் :

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து  விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனா். அப்போது அவாிடம், உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதையும் படிக்க : சமத்துவ பொங்கல் விழா...நடனம் ஆடிய காவல் கண்காணிப்பாளர்...!

ஓபிஎஸ் பதில் :

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீா்செல்வம் இரு கைகளையும் மேலே தூக்கியவாறு "இறைவனுக்கே தெரியும்" என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

முன்னதாக, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரணை செய்து வரும் உச்சநீதிமன்றம், கடந்த 2 வாரங்களாக விசாரித்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. பின்னர் நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் அதிமுக பொதுக்குழு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.