16 பேர் மட்டுமே ஒமிக்ரானுக்கு சிகிச்சை... சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்...

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

16 பேர் மட்டுமே ஒமிக்ரானுக்கு சிகிச்சை... சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்...

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி எம் எஸ் வளகாத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற்ற 16வது மெகா தடுப்பூசி முகாமில், 17 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை தமிழகத்தில் 8 கோடியே 31 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஒமிக்ரான் விஷயத்தில் வெளிப்படை தன்மையை அரசு கடைபிடிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், தமிழகத்தில் 16 பேர் மட்டுமே ஒமிக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒமிக்ரானை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.