ஆன்லைன் ரம்மி... பதிலளிக்க மறுத்த ராசா!!

ஆன்லைன் ரம்மி... பதிலளிக்க மறுத்த ராசா!!

பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசாங்கம் ஒழித்துகட்டி விட்டு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா.  நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பிய அவரிடம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.  அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் பின்தங்கியுள்ளதாக கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த ஆ.ராசா பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசாங்கம் ஒழித்துகட்டி விட்டு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது எனவும் அதில் ஒன்று தான் பிஎஸ்என்எல் எனவும் கூறினார். மேலும் ஆன்லைன் ரம்மி குறித்து கேள்விகேட்டபோது பதிலளிக்க மறுத்து புறப்பட்டு சென்றார். 

இதையும் படிக்க:   100வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டமும் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசாங்கமும்...!!