சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் ஒருவர் பலி....!!!

சென்னையில் தாறு மாறாக ஓடிய கார் மோதி, சாலையில் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் ஒருவர் பலி....!!!

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் எழும்பூர் அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றிரவு பணி முடித்து ரவிச்சந்திரன் கெங்குரெட்டி சுரங்கப்பாதை வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் தாறு மாறாக ஓடி ரவிச்சந்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ரவிச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் துரதிஷ்டவசமாக ரவிச்சந்திரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறனர்.