ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்...! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!! 

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்...! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!! 

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலமாக இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் எங்கும் பொருட்கள் வாங்கலாம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தங்களது சொந்த மாநிலத்தை விட்டு பிற பகுதிகளில் வசிப்பவர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.
   
ஆனால், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ்  பொருட்கள் தமிழ்நாட்டில் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை சாா்பில் எச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் தகுதி உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் மறுக்கப்படாமல் வழங்கப்பட வேண்டும் எனவும் அதனை மீறும் ஊழியா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.