காங்கோவில் இருந்து வந்த ஆரணி பெண்ணுக்கு ஒமிக்ரான் அறிகுறி ?....

காங்கோவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஆரணியை சார்ந்த பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதால்  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்

காங்கோவில் இருந்து வந்த ஆரணி பெண்ணுக்கு ஒமிக்ரான் அறிகுறி ?....

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த  பையூர் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான பெண்மணி கடந்த 12ஆம் தேதி காங்கோவில் இருந்து சொந்த ஊர் திருட்பினார்.  அந்தப் பெண்மணிக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் 14 ம் தேதி கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில்  தொற்று உறுதியானது.

இதையடுத்து அந்தப் பெண்ணை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரிடம் மேற்கொண்ட பரிசோதனை மாதிரிகள் டெல்லி  ஆய்வகத்திற்கு அனுப்பி  வைக்கப்பட்டது.

இது தொடர்பாக  சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காங்கோவில் இருந்து ஆரணிக்கு வந்த பெண்ணிற்கு ஒமிக்ரானுக்கு முன் வரும் அறிகுறிகள் இருப்பதால் அவரை தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.