தமிழகத்திலும் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்... நைஜீரியாவில் இருந்த சென்னை வந்தவருக்கு தொற்று உறுதி...

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்திலும் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்... நைஜீரியாவில் இருந்த சென்னை வந்தவருக்கு தொற்று உறுதி...

நைஜீரியாவில் இருந்து வந்த நபரோடு தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரான் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகளும் பரிசொதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நைஜீரிய நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவருக்கு மட்டும் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி பேசிய அமைச்சர்,  இந்தியாவின் 9 மாநிலங்களில் 69 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.