கருணாநிதி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு...தமிழ் வாழ்க என்ற பெயர் பலகையுடன் ஜொலிக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு, தமிழ் வாழ்க என்ற பெயர் பலகையுடன் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகம் நீல நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு...தமிழ் வாழ்க என்ற பெயர் பலகையுடன் ஜொலிக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம்!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 1 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நாளை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்.

இதனை முன்னிட்டு, ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம் நீல நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. ஏற்கனவே தமிழ் வாழ்க என்ற பலகை மருத்துவமனை வளாகத்தில் உள்ள நிலையில் கூடுதலாக வண்ண விளக்குகளால் பொறிக்கப்பட்ட தமிழ் வாழ்க என்ற பெயர் பலகையும் தற்காலிகமாக நிறுவப்பட்டிருப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.