என்.எல்.சி விரிவாக்கப் பணி; மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற அதிகாரிகள்!

என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி வளையமாதேவியில் மக்கள் எதிர்ப்பால் திரும்பி சென்ற அதிகாரிகள்.

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் பல நாட்களுக்குப் பிறகு என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணியில் தற்போது நிலம் மனைகளை என்எல்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் தற்போது சமன் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதனை அறிந்த வளையமாதேவி கிராம மக்கள், விவசாயிகள் பலர் பணி நடைபெறும் இடத்தில் ஒன்று திரண்டனர்.
 
அப்போது கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இன்று வரை முழுமையான இழப்பீடு வந்து சேரவில்லை. வாழ்வாதார பாதுகாப்பும் கிடைக்கவில்லை. வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை இல்லை. தற்போது இந்த பகுதியிலேயே இன்னமும் கைப்பற்றப்பட்ட இடங்கள் 100 ஏக்கருக்கு மேல் இருக்கிறது  அதற்கான எந்தவிதமான நிவாரணமும் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் எங்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டை  தந்து விட்டு நீங்கள் பணியை துவக்குங்கள். நாங்கள் அதிகாரிகள் பணி செய்வதை தடுக்கவில்லை என விவசாயிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இருந்த போதிலும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் மேடான பகுதிகள் தொடர்ந்து சமன்படுத்தப்பட்டது.  இதற்காக போலீசரும் குவிக்கப்பட்டனர். பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு விவசாயிகள் கிராம மக்களின் கோரிக்கைப்படி பேச்சு வார்த்தைக்கு பிறகு விரிவாக்க பணி மேற்கொள்ளப்படும் என்று நடைபெற்ற பணியை அதிகாரிகள் நிறுத்தினர். 

ஆனாலும் அங்கே கூடி இருந்த கிராம மக்கள் விவசாயிகளும் நீங்கள் தற்போது இப்படித்தான் கூறுவீர்கள் ஆனால் மீண்டும் எங்களது கவனத்தை திசை திருப்பிவிட்டு உங்களது பணியை மேற்கொள்வீர்கள். அதனால், எங்களுக்கு இழப்பீடு கொடுத்து விட்டு நீங்கள் எந்த வேலையும் செய்யலாம். அதற்கு நாங்கள் தடை சொல்லவில்லை என்ற பிறகு வேறு வழியில்லாமல் ஜேசிபி எந்திரங்களையும் மற்றும் அதிகாரிகள் வந்த ஜீப்பும் திரும்பிச் சென்றது. இருந்தபோதிலும் இப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் இன்னமும் இழப்பீடு பெறவில்லை. என்பது முழுமையாக நிரூபணம் ஆகிறது ஆனால் என்எல்சி நிர்வாகமும் நாங்கள் இழப்பீடு தந்து விட்டோம் என்று கூறுகிறது.

இது குறித்து விவசாயிகள் மேலும் தெரிவிக்கும் போது என்எல்சி நிர்வாகம் வேண்டும் என்று பொய் கூறுகிறது. எங்களைப் பழிவாங்குகிறது. நாங்கள் எங்களுடைய வாழ்வாதார பயன்பாடு கிடைத்துவிட்டால் நாங்கள் ஏன் பணிகளை தடுக்க போகிறோம் என்று தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!