அதிமுகவிற்கு தொடர்பில்லாத  ஓ.பி.எஸ்...அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது!

அதிமுகவிற்கு தொடர்பில்லாத  ஓ.பி.எஸ்...அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது!

ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என திருச்சியில் அதிமுகவினர் மாநகர உதவி ஆணையரிடம்  புகார் மனு அளித்துள்ளனா்.

திருச்சியில் அதிமுகவின் 51 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் முப்பெரும் விழா ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படிக்க : ரம்ஜான் திருநாள்... முக்கிய தலைவர்கள் வாழ்த்து...!

இந்நிலையில், இவ்விழாவில் அதிகாரப்பூர்வ அதிமுக கொடி மற்றும் பெயரை பயன்படுத்த கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் குமார் தலைமையில், அதிமுகவினா் மாநகர உதவி ஆணையரிடம் புகார் மனு அளித்தனா்.

பின்னா் செய்தியாளா்களை சந்தித்த அவா், அதிமுகவிற்கு தொடர்பில்லாத  ஓ.பி.எஸ், அதிமுகவின் கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்த கூடாது என தொிவித்தார்.