பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா- அதிமுக தொண்டர்கள் யாரும் அவர் பக்கம் செல்ல மாட்டார்கள்… மாஜி அமைச்சர் ஜெயக்குமார்  

பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா என்றும், அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்ல மாட்டார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்பட கூறினார்.

பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா- அதிமுக தொண்டர்கள் யாரும் அவர் பக்கம் செல்ல மாட்டார்கள்… மாஜி அமைச்சர் ஜெயக்குமார்   

அதிமுக பொன்விழா கொண்டாடுவது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தோற்றுவிக்கப்பட்ட 50 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆண்ட வரலாறு உள்ளதாகவும், அதிமுக பல சோதனைகள் இன்னல்களை தாங்கி வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.

மேலும், நெல்லையில் அதிமுகவின் 25ம் ஆண்டு மாநாட்டை ஜெயலலிதா சிறப்பாக கொண்டாடியதாக குறிப்பிட்ட அவர், 50ம் ஆண்டு பொன் விழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். சீமான் கருத்திற்கு பதிலளித்த அவர், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும், இமயமலை போல் இருக்கும் அதிமுகவை பரங்கிமலைப்போல் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சிப்பது தான் ஆகச்சிறந்த காமெடி எனவும் குறிப்பிட்டார்.

புதிய அவைத்தலைவர் தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என கூறிய அவர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புதிய யூகம் வகுப்பது தொடர்பாக மட்டுமே கருத்துக்களை கூறினார் என்றும், அவரின் கருத்துக்கள் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா என விமர்சித்த அவர்,அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்ல மாட்டார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்