தமிழர்கள் அல்லாத ஐபிஎல் அணி... தடை செய்யப்பட வேண்டும்...!!!

தமிழர்கள் அல்லாத ஐபிஎல் அணி... தடை செய்யப்பட வேண்டும்...!!!

தமிழர்கள் அல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல்-ல் தடை செய்ய வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் விளையாட்டு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில் அதில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசும்போது, தமிழ்நாட்டில் அதிக இளைஞர்களால் ஈர்க்கப்படும் போட்டி யான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இதில் தமிழ்நாட்டை சார்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணியும் உள்ளது எனக் கூறினார்.  மேலும் தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை என்பதை ஏமாற்றமாக பதிவு செய்தார்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தமிழ்நாட்டிற்கான அணி என்பது போல தமிழ்நாட்டு மக்களிடம் விளம்பரம் செய்து பெரும் வர்த்தக லாபத்தை அடைந்து வருகின்றது எனவும் தமிழ்நாட்டு வீரர்களே இல்லாத இந்த அணியை தமிழ்நாடு அரசு விளையாட தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேரவையில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கையாக வைத்துள்ளார்.

இதையும் படிக்க:  அதிகரித்து வரும் போலி மருத்துவர்கள்... கைது எண்ணிக்கை அதிகரிப்பு!!