தடைக்கால நிவாரணம், ஓய்வு ஊதியம் எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை - மீனவர்கள் குற்றச்சாட்டு!!

தடை கால நிவாரணம், ஓய்வு ஊதியம் உள்ளிட்ட எந்த சலுகைகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

தடைக்கால நிவாரணம், ஓய்வு ஊதியம்  எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை - மீனவர்கள் குற்றச்சாட்டு!!

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 2 மாதங்களாக தூர்வாரும் பணி நடைபெற்று வருக்கிறது.

இதனால் மீன்பிடி தடை காலத்தில் தொழில் செய்ய முடியாமல் இருந்த விசைப்படகு மீனவர்கள் தற்போது தூர்வாரும் பணி நடைபெறுவதால் மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் தர்ம பிச்சை, மீன்பிடி தடைக்காலம் மற்றும் தூர்வாரும் பணியின்போது அரசு அறிவித்த தடை கால நிவாரணம், கோடை கால நிவாரணம் எதுவும் தங்களுக்கு வந்து சேரவில்லை, மீனவர் ஓய்வூதியமும் கிடைக்கவில்லை என கூறினார்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு அமைத்து கொடுத்தது போல மீனவர்களுக்கும் நடமாடும் மருத்துவமனை அமைத்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், வயது முதிர்ந்த மீனவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், திருமண உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், தங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.