ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்...கேரளா, உத்தரகண்ட் மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அறிவிப்பு...!

ஒமிக்ரான் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை கேரள அரசு அறிவித்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்...கேரளா, உத்தரகண்ட் மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அறிவிப்பு...!

அதன்படி வரும் 30- ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2- ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரகண்ட் மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது..