புதிய நீதிபதிகள் நாளை பதவியேற்பு!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு கூடுதல் நீதிபதிகள், திங்கள் கிழமை பதவியேற்க உள்ளனர்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. தலைமை நீதிபதியுடன் சேர்த்து தற்போது 63 நீதிபதிகள் உள்ள நிலையில் வழக்கறிஞர்கள் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து, குடியரசுத் தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

 இவர்கள் இருவரும் திங்கள் கிழமை காலை 10 மணியளவில் பதவி ஏற்க உள்ளனர். 

அவர்களுக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா,  பதவி பிரமானம் செய்துவைக்கிறார். பின்னர் இரு புதிய நீதிபதிகளையும், தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்  வரவேற்று பேச உள்ளனர்.

புதிய நீதிபதிகளுடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து, காலியிடங்கள் 10ஆக குறைய உள்ளது.

இதையும் படிக்க: பகையால் நேர்ந்த விபரீதம்...குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!