வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு..? சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதி கனமழை...

வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதி கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு..? சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதி கனமழை...

தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப்பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிக கனமழையும், துாத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலுார், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.