சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் புதிய அறிவிப்புகள்...சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியீடு!

சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் புதிய அறிவிப்புகள்...சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியீடு!

அனைத்து மத்திய மற்றும் பெண்கள் சிறைச்சாலைகளில் நூலக வசதி மேம்படுத்தப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் பல்வேறு புதிய  அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையும் படிக்க : எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருப்பதற்கு ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை - ஜெயகுமார் விமர்சனம்!

அதில், அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிசிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் நூலக வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், சிறை மற்றும் சீர்திருத்த பள்ளிகளில் பணிபுரியும் முதல் மற்றும் 2-ஆம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் உயர்த்தி வழங்குதல், 9 மத்திய சிறைகளில் காணொளி சுவர் வசதி ஏற்படுத்துதல், சிறைவாசிகளுக்கு கூடுதல் செலவுடன் உணவு முறை மாற்றப்படும், சிறைவாசிகளுக்கு காணொலி தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும், சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்கள் காவலர் அங்காடிகளில் விற்பனை உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.