நாமக்கல் : மது போதையில் தவறி விழுந்து இளைஞர் பலி...!

நாமக்கல்லில் மது போதையில் தங்கும் விடுதியின் இரண்டாம் தளத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு.

நாமக்கல் : மது போதையில் தவறி விழுந்து இளைஞர் பலி...!

கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த ரதீஷ்(30) என்ற இளைஞர், நாமக்கல் அடுத்த பட்டறை மேட்டில் உள்ள கே.பி லாட்ஜ் என்ற தங்கும் விடுதி ஒன்றில் தங்கி, லாரிகளுக்கு கூண்டு கட்டும் பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பணியை முடித்து விட்டு மது போதையில் விடுதிக்கு திரும்பிய ரதீஷ், இரண்டாம் தளத்தின் வெளியே அமர்த்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் மது போதையில் நிலை தடுமாறிய ரதீஷ், இரண்டாம் தளத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.