தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவராக ந.கௌதமன் நியமனம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு... 

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவராக ந.கௌதமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவராக ந.கௌதமன் நியமனம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு... 

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவராக ந.கௌதமனை நியமித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் 1974ம் ஆண்டு கருணாநிதியால் மீனவர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது என்றும், இக்கழகத்தின் தலைவராக ந.கௌதமனை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் பிறந்த ந.கௌதமன், கடந்த 25 ஆண்டுகளாக மீனவ கிராமங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கண்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் பிரச்சினைகளை களையும் பொருட்டு, அரசு தரப்பில் அமைத்த குழுவில் இவர் இடம் பெற்று, இலங்கை சென்று அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு கண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2006-ம் ஆண்டு நாகை நகர் மன்ற உறுப்பினராகவும் ந.கௌதமன் பதவி வகித்ததாக கூறப்பட்டுள்ளது.