திண்டுக்கல்: ஏடிஎம்-ல் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி..!

திண்டுக்கல், திருச்சி சாலையில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதான வாயில் முன்பு உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம்-ல் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்: ஏடிஎம்-ல் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி..!

திண்டுக்கல் திருச்சி சாலையில் சீலபாடி ஆயுதப்படை மைதான வாயில் முன்பு அமைந்துள்ளது எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்தின் வெளியில் இருந்த சிசிடிவி கேமராவின் இணைப்பைத் துண்டித்து விட்டு பின்னர் ஏடிஎம் இயந்திரத்தின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நீண்ட நேரமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையர்கள்,  உடைக்க முடியாததால் தப்பி சென்றனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் DIG அலுவலகம் அருகாமையில் நடந்த இந்த திருட்டு முயற்சி சம்பவமானது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.