மருந்து கடையில் கொள்ளை அடித்த மர்ம நபர்கள்...! போலீசார் தீவிர விசாரணை...!

ஆவடி அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கொள்ளை

மருந்து கடையில் கொள்ளை அடித்த மர்ம நபர்கள்...! போலீசார் தீவிர விசாரணை...!

ஆவடி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஆவடி ஜேபி எஸ்டேட் பகுதியில் 6 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்து பார்த்த போது மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டியுள்ளனர்.

மேலும் கடையில் இருந்து, 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், ஆவடி காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னையில்  கைரேகை நிறுவனர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவுகள்   ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ஆவடி ஜேபி எஸ்டேட் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.