தோட்டத்திற்கு சென்ற பெண் மர்ம மரணம்... கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு...

மணப்பாறை அருகே தோட்டத்திற்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

தோட்டத்திற்கு சென்ற பெண் மர்ம மரணம்... கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு...

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள பில்லுப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி இளஞ்சியம். இவர் இன்று காலை தோட்டத்திற்கு கால்நடை மேய்ச்சல்களுக்கு விட சென்று விட்டார். பின்னர் மதியம் அவரது கணவர் பெருமாள் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொது இளஞ்சியம் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து உடனே கீழே இறக்கிப் பார்த்த போது இளஞ்சியம் இறந்திருப்பது தெரியவந்தது.

மேலும் அவரின் முகத்தில் காயங்களும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவிக்கவே அனைவரும் அங்கு சென்று இறந்தவரின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த இளஞ்சியம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இளஞ்சியம் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதனால் தடயவியல் மற்றும் விரல் ரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டத்திற்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.