கள்ளக்காதல் விவகாரம்- 2 வயது குழந்தையை கொலை செய்த தாய்...

பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது குழந்தையை கொலை செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். 

கள்ளக்காதல் விவகாரம்- 2 வயது குழந்தையை கொலை செய்த தாய்...

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன், சரோஜா தம்பதி. இவர்களுக்கு இரண்டு வயதில் நிவ்யாஸ்ரீ இருந்துள்ளார். இதற்கிடையில் தாய் சரோஜாவும் சின்ன பொம்மன் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக மகள் நிவ்யாஸ்ரீ இருப்பதாகவும், அவரை கொலை செய்துவிடும் படி சின்ன பொம்மன், சரோஜாவிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் கணவர் மணிகண்டன் வேலை சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த நிவ்யாஸ்ரீயை தாய் சரோஜா கொலை செய்துவிட்டு இறந்ததாக கூறியுள்ளார். இதற்கிடையில் குழந்தையின் இறப்பில் சந்தேகமடைந்த போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.

அதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காரணத்தால் 2 வயது குழந்தையை தாயே கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து சரோஜாவையும், கள்ளகாதலனான சின்ன பொம்மனையும்  கைது செய்த போலீசார், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.