குடும்ப பிரச்சனையில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்... இரண்டு குழந்தைகள் பரிதாப பலி...

கன்னியாகுமரி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக, இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சனையில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்... இரண்டு குழந்தைகள் பரிதாப பலி...
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் வடக்கு பகுதியில் வசித்து வருபவர்கள் பாண்டி, திருமலைச் செல்வி தம்பதி. இவர்களுக்கு திவ்யா, காவ்யா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாண்டி சரியாக வேலைக்கு செல்லாததால், கணவன், மனைவி இருவரிடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான  திருமலை செல்வி, கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து தன்னுடைய 2 மகள்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுட்டுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் குழந்தைகள் இருவரும் உயிர்பிழைத்த நிலையில், திருமலை செல்வி மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.