தீ விபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழப்பு..! கோவையில் நடந்த சோகம்!!

கோவையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு தாய் மற்றும் 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழப்பு..! கோவையில் நடந்த சோகம்!!

கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் தனது மகள்கள் அர்ச்சனா மற்றும் அஞ்சலியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில்  வீட்டில் இருந்து புகை வருவதாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு  தகவல்  தொிவித்தனர். இதையடுத்து  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கதவை உடைத்து தீயை அணைத்தனர்.

இதைதொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது தாய் மகள்கள்  3 பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். எனினும்  இது தீவிபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.