நாளை கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், நாளை மாலை 6:30 மணி அளவில் நடைபெறக்கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கான அனுமதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், துறை ரீதியான அமைச்சர்களின் செயல்பாடுகள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள்,  உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில் அமைச்சர்கள் கூட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.