7 லட்சம் செலவில் குளம் தூர் வாரும் பணி...தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி!

7 லட்சம் செலவில் குளம் தூர் வாரும் பணி...தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே குளம் தூர் வாரும் பணியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் முனசந்தை கிராமத்தில்  உள்ள பொன்னாச்சி கண்மாயை தூர்வாருவதற்காக நீர்வளத்துறை சார்பில் சுமார் 7 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் இன்று தொடங்கியது.

இதையும் படிக்க : " பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவை எதற்கு வைக்கனும்.. ?" - நடிகை கஸ்தூரி பேச்சு.

இப்பணியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு வாய்க்கால் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.