வேங்கைவயல் விவகாரம்...! விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்...! அமைச்சர் ரகுபதி தகவல் ...!!

வேங்கைவயல் விவகாரம்...! விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்...! அமைச்சர் ரகுபதி தகவல் ...!!

வேங்கைவயல் சம்பவம் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணனின் விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணை நடத்தியும் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படாதது வியப்பளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் கூறிய நிலையில் , வேங்கைவயல் ஒரு குக்கிராமம் என்றும் , சம்பவம் தொடர்பாக  சிசிடிவி ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜியின் கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வேங்கைவயல் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வு பெற்ற   நீதிபதி சத்தியநாராயணன் விரைவில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும் சிபிசிஐடி விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபிறகும் குற்றவாளிகள் அடையாளம் காணப்படாதது வியப்பளிப்பதாக எஸ் .எஸ் .பாலாஜி பேசிய நிலையில், குக்கிராமமான வேங்கை வயலில் குறிப்பிட்ட சம்பவம் நள்ளிரவில் நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக சிசிடிவி பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.