வெடி விபத்தில் உயிரிழப்பு; நிவாரணம் வழங்கிய அமைச்சர் KKSSRR!

வெடி விபத்தில் உயிரிழப்பு; நிவாரணம் வழங்கிய அமைச்சர்  KKSSRR!

விருதுநகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் நிவாரண நிதியை வழங்கினார்.  

சிவகாசி தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 18 ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி மற்றும் மண்குண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பானு ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 

இதையும் படிக்க : Doy you have Boyfriend? டெலிவரி ஏஜெண்ட் கேள்வி... வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, வெடி விபத்தில் உயிரிழந்த முருகேஸ்வரி மற்றும் பானு இருவரின் குடும்பத்தினாரிடம் நிவாரண தொகையை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.