" மக்கள் இருக்கின்ற பகுதிக்கு நேரடியாக மேயர் செல்ல வேண்டும் " - அமைச்சர் சேகர்பாபு கோரிக்கை.

" கால்வாய் ஓரங்கள் ; குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களையும் நேரில் சந்திக்க வேண்டும்",

" மக்கள் இருக்கின்ற பகுதிக்கு நேரடியாக மேயர் செல்ல வேண்டும் " -   அமைச்சர் சேகர்பாபு கோரிக்கை.

பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா தலைமையில் "மக்களைத் தேடி மேயர்" திட்டத்தின் கீழ்  மண்டலம்-6க்கு உட்பட்ட பொது மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான முகாம் இன்று நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து, இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் மக்களை தேடி மேயர் திட்டத்தின் மூலம் மேயர் பிரியா நேரடியாக மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற " மக்களைத் தேடி மேயர்" முகாமில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:- 

" கடந்த மூன்றாம் தேதி மக்களை தேடி மேயர் திட்டத்தின் முதல் கட்டமாக மண்டலம் 5 -க்கு உட்பட்ட பகுதியில் மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்திற்கு மக்கள் நேரடியாக வந்து சிரமப்படுவதை தவிர்க்க அந்தந்த மண்டலங்களிலேயே மக்களின் வசதிக்காக கோரிக்கை மனுக்கள் நேரடியாக பெறப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மக்களை தேடி மேயர் திட்டம் தொடர்ந்து நடைபெறும்". 

இதையும் படிக்க    | கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து... டெல்லி செல்லும் அமைச்சர்!

" 15 மண்டலங்களின் மனுக்களை பெற்ற பிறகு மக்கள் இருக்கின்ற பகுதிக்கு நேரடியாக மேயர் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறேன். நம்முடைய எஜமானர்களே மக்கள் தான் எனவே மக்களை தேடி செல்வதில் எந்த தவறும் இல்லை. 15 மண்டலங்களில் மனுக்களை பெற்ற பிறகு பகுதிவாரியாக கால்வாய் ஓரங்கள்  குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களையும் நேரில் சந்திக்க வேண்டும்",  எனத் தெரிவித்தார். 

இன்று நடைபெற்ற முகாமில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதையும் படிக்க    | செங்கோல் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லை ; அது ஒரு கட்டுக்கதை - மூத்த பத்திரிகையாளர் பேச்சு.....