'மாஸ்டர்' பட பெர்சியன் ரக பூனை திருட்டு.. சிசிடிவி காட்சி இன்டர்நெட்டில் பரவியதால் மீண்டும் பூனைய விட்டு சென்ற மர்ம நபர்கள்!!

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பெர்சியன் ரக பூனை ஒன்றை புதுச்சேரியில் 3 பேர் மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மாஸ்டர்' பட பெர்சியன் ரக பூனை திருட்டு.. சிசிடிவி காட்சி இன்டர்நெட்டில் பரவியதால் மீண்டும் பூனைய விட்டு சென்ற மர்ம நபர்கள்!!

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் செல்லப்பிரணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த 3 ஆண்டுகளாக உயர் ரக பூனை ஒன்றை அவர் வளர்த்து வந்தார். இந்த பூனை விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் கடந்த 18 ம் தேதி  அவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள்  3 பேர் அங்கு வளர்க்கப்படும் புறா, வண்ண மீன்கள், பூனையின் விலை கேட்ட அவர்கள் கடையின் உரிமையாளரின்  கவனத்தை திசை திருப்பி, அவர் 3 ஆண்டுகளாக வளர்த்து வந்த பூனையை தூக்கி கொண்டு மூவரும் பைக்கில் சென்றனர். இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து அதனை திருடி சென்றவர்கள் மீண்டும் கடைக்கு அருகே அந்த பூனைய விட்டுவிட்டு சென்றுள்ளனர்.