'மாஸ்டர்' பட பெர்சியன் ரக பூனை திருட்டு.. சிசிடிவி காட்சி இன்டர்நெட்டில் பரவியதால் மீண்டும் பூனைய விட்டு சென்ற மர்ம நபர்கள்!!
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பெர்சியன் ரக பூனை ஒன்றை புதுச்சேரியில் 3 பேர் மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் செல்லப்பிரணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த 3 ஆண்டுகளாக உயர் ரக பூனை ஒன்றை அவர் வளர்த்து வந்தார். இந்த பூனை விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் கடந்த 18 ம் தேதி அவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் அங்கு வளர்க்கப்படும் புறா, வண்ண மீன்கள், பூனையின் விலை கேட்ட அவர்கள் கடையின் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி, அவர் 3 ஆண்டுகளாக வளர்த்து வந்த பூனையை தூக்கி கொண்டு மூவரும் பைக்கில் சென்றனர். இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து அதனை திருடி சென்றவர்கள் மீண்டும் கடைக்கு அருகே அந்த பூனைய விட்டுவிட்டு சென்றுள்ளனர்.