மூச்சுத்திணறலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத்திணறலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

கே. பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்ததை அடுத்து இன்று கொரனோ தொற்றுக்கான பிந்தைய சிகிச்சைக்காக மருத்துவமனை வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து  அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு வீடு திரும்புவார் எனவும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.