தரையில் அமர்ந்து சாப்பிடும் மீராபாய் சானு... வெள்ளி மங்கையை பாராட்டிய மாதவன்...

டோக்கியோ ஒலிம்பிக்கின் வெள்ளி மங்கை தரையில் அமர்ந்து சாப்பிடுவதை பார்த்து தனக்கு வார்த்தை வரவில்லை என நடிகர் மாதவன் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

தரையில் அமர்ந்து சாப்பிடும் மீராபாய் சானு... வெள்ளி மங்கையை பாராட்டிய மாதவன்...
நடைபெற்று வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளுதூங்குதல் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வெற்று வந்தவர் தான் மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு. இந்தியாவுக்கான் முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது.
 
இந்த நிலையில் மீராபாய் சானு தனது குடும்ப உறுப்பினர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் மாதவன், இதை பார்த்து வாயடைத்து போய் இருப்பதாக, மீராபாய் சானுவின் எளிமையை வியந்து பாராட்டியுள்ளார்.