இந்தியாவில் சக்திவாய்ந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்!!!..
இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகவும் சக்திவாய்ந்த முதல்வராக ஸ்டாலின் திகழ்வதாக ஆளுநர் ஆர் என் ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா அப்பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதன்முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சக்திவாய்ந்த முதலமைச்சரே என்று உரையைத் தொடங்கினார் ஆளுநர். இன்று என்ன சாதித்தீர்களோ அது உங்களின் அர்ப்பணிப்பு & கடின உழைப்பால் சாத்தியமாகி உள்ளது. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு எப்போதும் உங்களை உயர்த்தும் என பேசிய ஆளுநர், கொரோனா இன்னும் போகவில்லை புதுப்புது வகைகளில் வந்துகொண்டே இருப்பதாகவும்,
இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக தெரிவித்தார்.
சமுதாயத்தின் விலை மதிக்கமுடியாத சொத்துக்களான மருத்துவர்கள், தங்கள் உடல்நலனை சரியாக பராமரிக்க வேண்டும். கடும் அழுத்தம் நிறைந்ததாக மருத்துவர்களின் வாழ்வு இருந்தாலும், அவர்கள் தங்கள் உடல்நலன், மன நலனை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.