கருணாநிதியின் நினைவு நாளை எளிமையாக கடைபிடிக்க திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை எளிமையாக கடைபிடிக்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருணாநிதியின் நினைவு நாளை எளிமையாக கடைபிடிக்க திமுக தொண்டர்களுக்கு  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...

வரும் 7ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான் மு.க.ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் ஆறாவது முறையாக ஆட்சியமைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தல் களத்தில் தென்றலை தீண்டவில்லை என்றும், தீயை தாண்டி வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் - பேரிடர் - சூழலிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அரணாக இருந்து, தி.மு. க அளித்த - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தலையாய கடமையாகக் கொண்டு தாம் செயலாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி நினைவு நாளான வரும் 7-ம் தேதி, கொரோனா கால நெறிமுறைகளை கடைப்பிடித்து, அவரவர் இல்லத்தின் வாசலில் கருணாநிதியின் படத்தை வைத்து, புகழ் வணக்கம் செலுத்தலாம் என்றும், பெரு விழாக்கள் வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.