அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, செவ்வாய் கிழமை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்...பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிக பட்சமாக, 40 டிகிரி செல்சியஸ்சும், குறைந்த பட்சம் 29 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.