கொடைக்கானல்: சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து நேரிடும் அபாயம்!

கொடைக்கானல்: சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து நேரிடும் அபாயம்!

கொடைக்கானல் ஏரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலைகளில் சுற்றித்திரியும் வளர்ப்பு மாடுகளால், அடிக்கடி விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் பகுதியாக நட்சத்திர ஏரி இருந்து வருகிறது. இந்தநிலையில், ஏரி சாலை உட்பட கொடைக்கானலின்  பல்வேறு பகுதிகளில், சாலைகளில் வளர்ப்பு மாடுகள் சுற்றித் திரிகின்றன.

அவ்வாறு சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறன்றன. எனவே நகராட்சி நிர்வாகம், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டும் நிறுத்தாமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.