"காவிரி பிரச்னை; உச்சநீதிமன்றத்தில் வாதத்தை முன் வைப்போம்" - அமைச்சர் துரைமுருகன்

"காவிரி பிரச்னை; உச்சநீதிமன்றத்தில் வாதத்தை முன் வைப்போம்" -  அமைச்சர் துரைமுருகன்

காவிரி நீர் பிரச்னை குறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தமிழ்நாடு அரசு தங்களுடைய வாதத்தை முன் வைக்கும் என அமைச்சர் துரைமுருகன் தொிவித்தார்.  

வேலூர் மாநகராட்சியில் பணிகள் சரியாக நடைபெறவில்லை - புதியதலைமை செயலகம் குறித்து உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு தமிழக அரசு பதில் அளிக்கும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேட்டி வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநகராட்சியின் பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடித்து சாலைகள் அமைத்தல், தெருவிளக்குகள் பராமரித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், அம்ருத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை ஆங்காங்கே கசியும் பழுதுகளை நீக்கி தண்ணீரை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைவாக மக்களுக்கு செய்யும் நோக்கத்தில் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி விரைவாக முடிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

“ இதுவரையில் மாநகராட்சியின் பணிகளை முடிக்க 4 முறை கூட்டம் நடத்தியுள்ளோம். இன்னும் பணிகள் நடக்கவில்லை என்பது உண்மை தான் இன்னும் மாதம் தோறும் ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய சொல்லியுள்ளேன். அந்த கூட்டங்களில் எவ்வளவு பணிகளை செய்துள்ளனர் என ஆய்வு செய்வேன் இதே போன்று குடிநீர் தட்டுபாடில்லாமல் வழங்கவும் சாலைகள் அமைக்கவும் எடுத்து கூறப்பட்டுள்ளது.

அம்ருத் திட்டத்தில் ஆங்காங்கே குடிநீர் பைப் கசிவு ஏற்படுவதால் சிரமம் உள்ளது விரைவில் அதுவும் செய்து முடிக்கப்படும் காவிரி நீர் பிரச்சணை குறித்து உச்சநீதிமன்றம் வழக்கை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதில் தமிழகம் மீண்டும் எங்கள் வாதத்தை 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் வைப்போம். புதியதலைமை செயலகம் வழக்கு குறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு உரிய பதிலை நீதிமன்றத்திற்கு அளிப்போம். பழைய அதிமுக ஆட்சியில் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தான் சாலைகள் சரியில்லாததற்கு காரணம்”,  என்று கூறினார்.

இதையும் படிக்க   | காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு...!