கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு நிபந்தனை ஜாமீன்!!

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு நிபந்தனை ஜாமீன்!!

சீனர்களுக்கு பணி விசா பெற்றுத்தர 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தியாவில் சீனர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி விசா பெற்றுத் தர 50 லட்சம் ரூபாயை அவரது மகன் கார்த்தி சிதம்பரம்  வாங்கியதாக  சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

கடந்த மாதம் அவருக்குச் சொந்தமான 10-கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், உரிய ஒத்துழைப்பு கொடுக்காத கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்து, டெல்லி திகார் சிறையில் அடைத்தது. இதனிடையே ஜாமீன் கோரி  அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இரண்டு லட்ச ரூபாய் பிணைத் தொகை மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.