பாஜக நடிகை மீது கந்துவட்டி புகார் -தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றசாட்டு...

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வங்கியில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி  தற்போது கந்துவட்டி கொடுமைக்கு தங்களை உள்ளாக்குவதாக பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் நடிகை ஜெயலட்சுமி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக நடிகை மீது கந்துவட்டி புகார் -தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றசாட்டு...

சென்னை பாடி தெற்கு மாட வீதி பகுதியைச் சேர்ந்தவர் கீதா. கணவர் உயிரிழந்த நிலையில் தனது பகுதியில் உள்ள பெண்களுடன் இணைந்து மகளிர் சுய உதவிக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கீதா இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஜெயலட்சுமி மீது புகார் ஒன்றை அளித்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கீதா, தேர்தல் நேரத்தில் தங்கள் குழுவுக்கு அறிமுகமான நடிகையும் பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி தங்கள் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வங்கி மூலம் 10 பைசா வட்டியில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி 9 பெண்களுக்கு வங்கி மூலம் லோன் பெற்றுத் தந்ததாகவும், இதுவரை தாங்கள் செலுத்திய பணம் அனைத்தும் வட்டி மட்டும் தான் என்றும்  அசல் பணம் கேட்டு தங்களை மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.